சனி, 10 மார்ச், 2012

கொலையிச்சை கிரகம்

கொலையிச்சை கிரகம் என்றால் என்ன ? 

                              கொலையிச்சை கிரக நோய் என்றால் ஒரு வித துர்க்கிரக பாதிப்பினால் ஏற்ப்படும். இதனால் உடல் மெலிந்து துர்நாற்றம் வீசுதல் , தோற்றம் மாறி முகம் விகாரம் அடைதல் , நாவைக்கடித்தல் , கண்ணீர் சொரிதல் , மூக்கு வரளல் , வெறித்த பார்வை , நாவரண்டு தாகித்தல் , துர்நாற்றமுள்ள வாந்தி,  நவ துவாரத்திலும் குருதி இழிதல் , வயிறு காந்தி எரிதல் , நினைவு மாறல் போன்றவை காணும்.  மேலும் பொறுப்பற்ற தீய செயலையும் செய்வர் . அவை - மழைநீரை பிசைதல் , மார்பில் அடித்து கொள்ளுதல் , எதிரில் வருவோரைத் திட்டி தீர்த்தல் , பிறரை ஆயுதம் தடி முதலியனக் கொண்டு எரிந்து தாக்குதல் , குளம் , கிணறுகளில் விழுந்து சாக முயலுதல் முதலியனவாகும். இதற்க்கு வெறி நோய் மருந்துகளுடன் கிரக சாந்தி வழிபாடும் தேவை ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக