சனி, 21 ஜனவரி, 2012

பிள்ளை - சவலை பாய்தல்

பிள்ளை - சவலை பாய்தல் என்றால் என்ன ?

         பொதுவாக மாதாந்திர முழுக்கான பெண்ணின் பார்வக்குள்ளாக்கப்பட்ட குழந்தைக்கு காணும் ஒரு வகை இளைப்பு நோயே    சவலை பாய்தல் எனப்படும் . மேலும் மாத முழுக்கான பின் கருப்பத்தை நாடி குழந்தைகள் முகத்தில் விழித்து , அன்றிரவு கணவனை கூடி கருவுற்றால் , அக்குழந்தை நாளுக்கு நாள் உடல் இளைத்து , பலவீனமுற்று , தோடக்குற்றம் பெருகி மிகத்துன்பம் அடையும். அதோடு அக்கருப்பிணி குழந்தை பெற்றவுடன் , தோடமுற்ற அந்த சவலை  குழந்தை இறந்துவிடுவதும் உண்டு. நிற்க . கைக் குழந்தையாயிருக்கும்போது , ஒருவள் கருப்பமுற்று அச்சமயத்தில் கைக் குழந்தைக்கு பால் கொடுப்பதினாலும் - அல்லது கருவுற்றதால் பால் கொடுக்காமல் குழந்தையை ஏக்கமுற  செய்வதாலும் - விபரமறியுமுன்னே அடுத்த குழந்தை வந்து விடுவதால் அதனை கண்டு குழப்பமும் , தன்னை கவனிக்க வில்லையே என்ற மன ஏக்கமும் சவலை நோய் ஏற்பட காரணமாகும். ( சவலை பருவம் என்பது ஒரு வருட காலமாகும் )எனவே கண்டிப்பாக இரு குழந்தைகளுக்கிடையே குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் இடைவெளி வேண்டும். 

1 கருத்து:

  1. Excellent Ashok. This is what happening to my Daughter now. Paining period in our life now a days. Thanks a lot for the valuable information. Please provide your contact number, I will talk to you.

    Saravanan.S (saravana221078@hotmail.com)

    பதிலளிநீக்கு