ஆன்மா (ஆத்துமா) என்றால் என்ன ?

இது ஒன்றே ஆயினும் ஆன்மா - முமூட்சு - நித்தியா முக்தன் - சீவன் முக்தன் என நான்காக விளக்கப்படும். சுத்த சத்துக்கள் தொடர்பாக உடல் முற்றும் பரவி நிற்கும் சுத்த சூக்கும தத்துவமாகிய ஆன்மா எந்த வடிவிலும் பொருந்தியதல்ல. பிற தத்துவங்களைப் போல் அழியக்கூடியதல்ல. சகல உயிர்களிலும் சமமாக அமைந்துள்ளது.மனதிற்கெட்டாதது பூதமுமின்றி , பிரகிருதியுமின்றி , சுயம்புவாய் தனக்கு தானே விளங்க கூடியது . பேதமும் நிறமும் அற்றது -- பிறப்பற்றது -- நித்தியமானது--மாறாதது -- சூக்குமத்தில் சூக்குமமானது --பெரிதினும் பெரிதானது காலத்தில் தோன்றி அழியும் பொருளல்ல - எப்போதும் அழியாத்தன்மையுடயது . ஆதியும் அந்தமும் அற்றது , இதை சித்தர்களால் மட்டுமே அறிய இயலும்.
ஒண்ணும் புரியல.
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.
பதிலளிநீக்கு