உடம்பு என்றால் என்ன ?
கூறுவேன் தேகமது என்னவென்றால் ,
குருபரனே எலும்புதனை காலாய் நாட்டி ,
மாறுபடா எலும்புக்கு துவாரமிட்டு ,
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி ,
தேருதலாய் ரத்தமதை உள்ளே ஊற்றி ,
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி ,
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி,
அப்பனே தேகமென்ற கூறு உண்டாச்சே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக