ஞாயிறு, 11 மார்ச், 2012

பத்தியம் என்றால் என்ன ? 2

பத்தியம் என்றால் என்ன ?

                     கடும் பத்தியத்திற்குரிய விதிமுறை என்ன ?

                     கடும் பத்தியத்தின் பொழுது பத்திய உணவுகளுடன் உப்பு , புளி நீக்கி உண்ணல் வேண்டும் . மருந்தை நிறுத்திய பின்பும் சில நாட்கள் வரை வருத்த உப்பும் , சுட்ட புளியும் கூட்டி நெய் , சீரகம் தாளிதமிட்டும் சேர்த்து மறு பத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் . . மிகு கடும் பத்தியத்தில் புதுக் குடுவையில் சோறு வடித்து உப்பின்றி வெறும் சுடுநீர் மட்டும் சேர்த்து சாப்பிட வேண்டும் . இதில் முறை தவறினால் கை , கால் முதலியன வீங்கும் .

                      பத்தியத்திற்கு ஏற்ற  உணவுப்பொருட்களாவன :-


                      கட்டிய உப்பு , ஆமை , புளியாரை , சீயக்கொளுந்து , நெல்லி , அரு நெல்லி , வெள்ளாடு , முயல் , ஊர்க்குருவி , காடை , மான் , மரை , சுறாமீன் , மயரை , குரவை , வரால் , தேளி , மிளகு , சர்க்கரை , தேன் , சிறுகீரை , ஆவின் பால் , நெய் , சிறுபயறு , பொன்னாங்கண்ணி , துவரை , அவரை பிஞ்சு , புடலம் பிஞ்சு , கதலி வாழைப்பழம் , கொதி நீர் , அத்திப்பிஞ்சு ,  முருங்கை பிஞ்சு , பரட்டை கீரை , முள்ளி பிஞ்சு , தூதுளை சமூலம் , கண்டங்கத்திரி பிஞ்சு , ஆகியனவாகும், இவை பிணிகளை விளக்கும் அல்லது மீற விடாது ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக