வியாழன், 15 மார்ச், 2012

பத்தியம் - 3

அம்மைக்குரிய உணவு விதி என்ன ?

                          அம்மை நோயால் தாக்கப்பட்டோர் முறையே எலும்பிச்சன்பழம்   , பழம் புளி , நெல்லிக்காய் , பனங்கற்கண்டு  ,  கெளுத்திகருவாடு , பாசிப்பயறு , குரவை கருவாடு , வெள்ளாட்டு உப்பக்கண்டம் , காடை , வெள்ளெலி , ஊர்க்குருவி , உடும்பு , அத்திபிஞ்சு , வாழைக்கச்சல், நீர்மோர் , வெங்காயம் ஆகியவற்றை பத்திய உணவாக மேற்கொள்ளலாம் , . ஆயின் , மாங்காய்   , தேங்காய் , இலுப்பெண்ணை , நல்லெண்ணெய் , சோற்றாவி   , நெல்லாவி , கொட்டைமுத்தாவி , தாளித்த வாடை இவை உடலில் பட்டால் கூட கருஞ்சூலை ,  கடுப்பு , கைகால் முடக்கம்  ஆகியன விளையும். 

 இவ்வாறே சுரத்திற்கு ஆகாத பொருள்களும் இவையாவன . பால் , இளநீர் , எண்ணெய் , போகம் , குளிர்ந்தாறிய சோறு , மிகு நடை , தயிர் , புளிப்பு , மிகு வேலை , இனிப்பு பாகு , பச்சை மீன் . இறைச்சி , கோழி , பழங்கறி , தேங்காய் , மாங்காய் ,நெய் , பருப்பு ,   முட்டை , புனுகு , சந்தனம் , தோசை , பிட்டு , பணியாரம் , பயறு , அவல் , பொரி , உறக்கம் , மஞ்சள் வாடை , பழங்கஞ்சி , மிகு தூக்கம் , ஆசையுடன் பொருள் தேடல் ,ஆகியவற்றை கைக்கொள்ளல் கூடாது . ஒருகால் தவறி சேர்ப்பின் சன்னி தோடமும்  , அது மீறினால் மரணமும் விளையும். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக