அம்மைக்குரிய உணவு விதி என்ன ?
அம்மை நோயால் தாக்கப்பட்டோர் முறையே எலும்பிச்சன்பழம் , பழம் புளி , நெல்லிக்காய் , பனங்கற்கண்டு , கெளுத்திகருவாடு , பாசிப்பயறு , குரவை கருவாடு , வெள்ளாட்டு உப்பக்கண்டம் , காடை , வெள்ளெலி , ஊர்க்குருவி , உடும்பு , அத்திபிஞ்சு , வாழைக்கச்சல், நீர்மோர் , வெங்காயம் ஆகியவற்றை பத்திய உணவாக மேற்கொள்ளலாம் , . ஆயின் , மாங்காய் , தேங்காய் , இலுப்பெண்ணை , நல்லெண்ணெய் , சோற்றாவி , நெல்லாவி , கொட்டைமுத்தாவி , தாளித்த வாடை இவை உடலில் பட்டால் கூட கருஞ்சூலை , கடுப்பு , கைகால் முடக்கம் ஆகியன விளையும்.
இவ்வாறே சுரத்திற்கு ஆகாத பொருள்களும் இவையாவன . பால் , இளநீர் , எண்ணெய் , போகம் , குளிர்ந்தாறிய சோறு , மிகு நடை , தயிர் , புளிப்பு , மிகு வேலை , இனிப்பு பாகு , பச்சை மீன் . இறைச்சி , கோழி , பழங்கறி , தேங்காய் , மாங்காய் ,நெய் , பருப்பு , முட்டை , புனுகு , சந்தனம் , தோசை , பிட்டு , பணியாரம் , பயறு , அவல் , பொரி , உறக்கம் , மஞ்சள் வாடை , பழங்கஞ்சி , மிகு தூக்கம் , ஆசையுடன் பொருள் தேடல் ,ஆகியவற்றை கைக்கொள்ளல் கூடாது . ஒருகால் தவறி சேர்ப்பின் சன்னி தோடமும் , அது மீறினால் மரணமும் விளையும். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக