விசக்கடியில் உயிர் இருப்பதை அறிவது
அரவம் முதலிய கொடிய நச்சுயிர்கள் தீண்டியவன் மயங்கி கிடக்கையில் அவன் உடலில் உயிர் உள்ளதா - இல்லையா என்பதை சில குறிகளால் அறியலாம் . அதாவது விழி மேல் அல்லது கீழ் நோக்கியோ , பக்கத்தில் ஒதுங்கி இருப்பினும் - விரலில் சுடக்கு பரியினும் - கீறிய இடத்தில் சிவப்பு குருதி வடியினும் - நகக்கண்ணில் உதிரமோடினும் - அடித்த இடம் தடித்து சிவந்து வெதும்பினும் - கொடுத்த மருந்து எதிரேடுப்பினும் - தண்ணீரில் முங்கினாலும் - எருக்கு அல்லது தைவேளை சாற்றை ஒரு காதில் விட அது மற்றொரு காதில் வராதிருப்பினும் - உடலில் உயிர் அடங்கி உள்ளது என உணர்ந்து , சிகிச்சை செய்ய உயிர் திரும்பும் ....
ஆயின் மேற்படி குறிகளுக்கு மாறான குறிகளுடன் - விழி நிலைத்து - தாது நின்று , உடல் குளிர்ந்து பல் கறுத்து இருப்பினும் விஷக்கடியுண்டவன் இறந்து விட்டான் என அறிக ..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக