நாடித் துடிப்பு எப்படி ஏற்படுகின்றது ?

நாடித்துடிப்பினை தசநாடி இருப்பிடங்களிலும் உணரலாம் எனினும் , கைகளில் அறிவதே நலமாகும் . எனவே ஆண்களுக்கு வலது கரத்திலும் , பெண்களுக்கு இடது கரத்திலுமாக -- முன் கையின் ஆரை எலும்பின் மேற்புறமுள்ள பெரு நாடியை - மணிக்கட்டிற்கு கீழே ஒரு அங்குலம் தள்ளி முவ்விரலால் மாறி மாறி மெதுவாக அழுத்தியும் தளர்த்தியும் பார்க்க வேண்டும் . அவ்வமயம் நமது ஆள்காட்டி விரலில் உணர்வது வாதம் எனவும் , நடு விரலில் உணர்வது பித்தம் எனவும் , மோதிர விரலிளுனர்வது சிலேத்துமம் எனவும் அறியவும் . மற்றும் பூத நாடி பெரு விரல் - சிறு விரலிலும் குரு நாடி ஐந்து விரல்களிலும் சேர்ந்தும் நிற்கும். இதில் நாடியின் எண்ணிக்கை, நடை, அழுத்தம், தன்மை,எழுச்சியின் அளவு இவற்றை அறிய வேண்டும்
உங்கள் கருத்தூக்களுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குநாடியின் செயற்பாடுகளை வைத்து எவ்வாறு நோய்களை இனங்கானுவது? நாடியின் தன்மைகள் பற்றி கூறுவீர்களானால் மிகவும் நன்றியுடையவர்களாக இருப்போம்.