நாடித் துடிப்பு எப்படி ஏற்படுகின்றது ?
நமது இருதயத்தின் இடது சடரம் குவியும் பொழுது இரத்தம் தள்ளப்பட்டு கண்டரையின் மூலம் சகல நாளங்களுக்கும் பாய்வதால் நாளங்கள் விரியும் . மீண்டும் இடது சடரம் விரியும் பொழுது குருதி இழுக்கப்படுவதால் நாளங்கள் சுருங்கும் . இவ்விதம் இருதயம் விரியவும் சுருங்கவும் இருப்பதால் இதனை சேர்ந்த நாடி நரம்புகளும் விரிந்து சுருங்கும் தன்மை உடையதாக இயங்கி , இருதய நடையின் மாறுதல்களை தெரிவிக்கின்றது . இருதயத்தின் நிலையும் உடல் நிலைக்கேற்ப மாறுபாடு அடைவதால் அவற்றை நாம் நாடித்துடிப்பின் மூலம் அறிய முடிகின்றது .
நாடித்துடிப்பினை தசநாடி இருப்பிடங்களிலும் உணரலாம் எனினும் , கைகளில் அறிவதே நலமாகும் . எனவே ஆண்களுக்கு வலது கரத்திலும் , பெண்களுக்கு இடது கரத்திலுமாக -- முன் கையின் ஆரை எலும்பின் மேற்புறமுள்ள பெரு நாடியை - மணிக்கட்டிற்கு கீழே ஒரு அங்குலம் தள்ளி முவ்விரலால் மாறி மாறி மெதுவாக அழுத்தியும் தளர்த்தியும் பார்க்க வேண்டும் . அவ்வமயம் நமது ஆள்காட்டி விரலில் உணர்வது வாதம் எனவும் , நடு விரலில் உணர்வது பித்தம் எனவும் , மோதிர விரலிளுனர்வது சிலேத்துமம் எனவும் அறியவும் . மற்றும் பூத நாடி பெரு விரல் - சிறு விரலிலும் குரு நாடி ஐந்து விரல்களிலும் சேர்ந்தும் நிற்கும். இதில் நாடியின் எண்ணிக்கை, நடை, அழுத்தம், தன்மை,எழுச்சியின் அளவு இவற்றை அறிய வேண்டும்
உங்கள் கருத்தூக்களுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குநாடியின் செயற்பாடுகளை வைத்து எவ்வாறு நோய்களை இனங்கானுவது? நாடியின் தன்மைகள் பற்றி கூறுவீர்களானால் மிகவும் நன்றியுடையவர்களாக இருப்போம்.