நாடித்துடிப்ப்பின் எண்ணிக்கை வயதுக்கேற்ப மாறுபடும். அதாவது ஒரு நிமிடத்திற்கு பிறந்த குழந்தைக்கு - 140 ; குழந்தைகட்கு - 100 ; பால பருவத்தில் 120 - 130 ; வாலிபத்தில் - 90 ; முழு பருவ ஆணுக்கு 70 முதல் - 90 வரை ; முழு பருவ பெண்ணுக்கு 75 முதல் - 80 வரை : தளர்ந்த பருவத்தில் 80 ; வயதான பிறகு 75 ஆகிய தடவைகளும் மற்றும் அமர்ந்திருப்பின் 40 ; நின்றால் 75 ; படுக்கையில் 67 தடவையும் வீதம் சாதாரணமாக நாடி துடிக்கும் . இதில் கோதுமையின் அளவுள்ள ஒரு மாத்திரை அளவில் வாத நாடியும் , அரை மாத்திரை அளவில் பித்த நாடியும் , மேற்படி கால் மாத்திரை அளவில் கப நாடியும் நடந்தால் நலமாகும் . இதில் மாறுதல் காணின் பிணி பற்றும் என்பதை அறியலாம் .
நாடித்துடிப்பை சித்திரை - வைகாசி மாதத்தில் - உதயத்திலும் . ஆணி - ஆடி - ஐப்பசி - கார்த்திக்கையில் மதியத்திலும் - பங்குனி - ஆவணி - புரட்டாசியில் இரவிலும் முறையே தெளிவாக அறியலாம் . மேலும் காலை மணி ஆறு முதல் - பத்து வரை வாதமும் , பத்து மணி முதல் - இரண்டு மணி வரை பித்தமும் , மாலை இரண்டு முதல் - ஆறு வரை கபமும் , மிகவும் எழுச்சியுடன் இருக்கும் ஆகவே அந்தந்த வேளையில் அவ்வவற்றை கண்டறிதல் சுலபமாகும் . இங்ஙனமே மாலை ஆறு முதல் காலை ஆறு வரை உள்ள இரவு நேரத்திற்கும் கிரமப்படி கண்டறிதல் வேண்டும் .
பகிர்வுகளுக்கு நன்றிகள்
பதிலளிநீக்குஉங்கள் பணி மேலும் தொடரட்டும்