ஞாயிறு, 22 ஜூலை, 2012

சித்தர்கள் லிங்க பூசையின் தத்துவம்

                      சித்தர்கள் லிங்க பூசையின் தத்துவம்:-

                      சித்தர்களின்  கொள்கை படி ஈசனை { உயிரை } வணங்குவது - சிவ பூசை எனவும் , ஈசுவரியை ( வலிமையை ) வணங்குவது - சக்தி பூசை எனவும் , இருவரையும் ஒருங்கே  வணங்குவது சிவசக்தி பூசை எனவும் கூறப்படும் .  உலகின் அனைத்து தோற்றத்திற்கும் , இயக்கத்திற்கும் ஆதாரமாக  உள்ளது  விந்து - நாதமே என்ற தத்துவத்த்டை குறிப்பதற்கு ஆண் பெண் குறிகளின் தோற்றமாக இலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது . இலிங்கம் கல்லினால் குழவியை போல் செய்து மேற்பக்கம் உருண்டயாகவும் அடிப்பக்கம் யோநி என்ற பீடத்தில் பொருந்தியதாகவும் இருக்கும். எனவே இலிங்க பூசையிலே சக்தி பூசையும் அடங்கியுள்ளது . ஆண் பெண் இரண்டையும் குறிப்பதால் இதனை ஆவுடையார் எனவும் கூறப்படும் . பஞ்ச பூதங்களையும் குறிக்க கூடிய லிங்கமானது ஆதார - பிராண - சிவ - மூல - பார்த்திவ - பாதாள - ஆவடையார் லிங்கங்கள் என பலவகையாக கொள்ளப்படும் . ஆயினும் ஆகம விதிப்படி ஐவகையாக மட்டுமே கொள்ளப்படும் . அவையாவன :- 

1.  பெண்லிங்கம்  :-  இது இருபாலரின் குறியும் இணைந்துள்ளதால் இது  பொது வழிபாட்டுக்குரியது . இது முதல் நிலையாகிய சரியை க்கும் உடையது .

2. பூலிங்கம் :- இது ஆண் லிங்கமாகும் . இது உண்மை , சக்தியை கண்டறிய உதவும் லிங்கமாகும். இது இரண்டாவது நிலையான கிரியையின் தொடக்கத்திற்கு உரியது

3.  நபும்சக லிங்கம் :- இது இரண்டிலும் சேராதது . இருண்ட நாடு நிலையான , மற்றும் கிரியை வெற்றி பெறும் நிலையில் உள்ள வழிபாடாகும் . 

4.  பரம லிங்கம் :- இதுமிக உயர்ந்த அல்லது மறைப்பு லிங்கமாகும் .  இது மூன்றாம் நிலையான யோக வழிபாட்டிற்குரியது . 

5.  மகா லிங்கம் :- இது அறிவு ஒளியானது . இது பிறப்பை மறுத்து பரம்பொருளை  அடைவதற்கு உரிய நான்காம் நிலையான ஞான வழிபாட்டிற்குரியது .

                                    இவ்வகை லிங்கங்களையும் , பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பிரித்து பிருத்விலிங்கம் காஞ்சிபுரத்திலும் , அப்பு லிங்கம் - சம்புகேச்வரம் , திருவானைக்காவலிலும்  , தேயு லிங்கம் - திருவண்ணாமலையிலும் , வாயு லிங்கம் - காளத்தியிலும் , ஆகாய லிங்கம் - சிதம்பரத்திலும் நிர்மாணிக்க பட்டுள்ளது .
                                 இவ்வகை வழிபாடு யாவுமே சிவ-சக்தியின் வலிமையை உலகத்திற்கு உணர்த்துவதற்கும் , மேல் நிலையை அடைய வழிகாட்டுவதற்கும் வகுக்கபட்டவையே தவிர வேறில்லை . விநாயகர் வடிவ அமைப்பிலும் , ஓம் என்ற எழுத்தின் வடிவிலும் உள்ள சூக்குமம் இதுவன்றி வேறொன்றுமில்லை .

                    

2 கருத்துகள்: