வேகங்களை அடக்குவதால் உண்டாகும் விளைவுகள் - பகுதி -2
மலம் - நீரை அடக்கினால் -- மலத்தை அடக்கினால் அபான வாயு பெருகி அடக்கிய மலத்தை தள்ளும். மேலும் மலத்தோடம் , முழங்காலின் கீழ்த்தன்மையான நோய் , தலை வலி , ஒலியுடன் வாயு பிரிதல் , பலவீனம் , மல நீர்க்கட்டு , முதலியன
விளையும் .
சிறுநீரை அடக்குவதால்- சிறு நீரை அடக்கினால் நீரடைப்பு , நீரிறங்கும் புழை புண்ணாய் எரிதல் , ஆண்குறி சோர்ந்து குத்தல் , கீல்களில் வலி , வயிற்றில் அபான வாயு நிறைதல் முதலியவை காணும்.
பசி தாகத்தை -- அடக்கினால் உடலுறுப்புகள் செயல் குன்றி சூலை , பிரமை , உடலிலைப்பு , முகவாட்டம் , வலி ஆகியவையும் நாளடைவில் மூலசூடு கண்டு , தாதுவற்றி சய நோயும் காணும்.
தொடரும் ---------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக