ஞாயிறு, 15 ஜனவரி, 2012

நால்வகை சித்தர்கள்

நால்வகை சித்தர்கள் என்பவர்கள் யாவர் ?

                          பொதுவாக  சித்தர்கள்  , வேதாந்தம்  - சித்தாந்தம் -  வேதாந்த சித்தாந்தம் என்று மூன்று பிரிவினுள் செயல்பட்டு சித்தியடைவர். இவர்களை குறிப்பாக , பிரம்மவித்து , பிரம்மவிதுர் - பிரம்மவிதுர்யான் - பிரம்மவிதிருஷ்டு என நான்கு வகையாகப் பிரிக்கலாம் ..

                           அதாவது,

                         1 . பிரம்மவித்து என்பது ,  இலட்சியம் மோனத்திலிருப்பினும் , சாதாரண மனிதனை போல் வாழ்வதுடன்  - பலன் கருதாமல் தன்னை போல் பிறரையும் மேல் நிலைக்கு கொண்டு வரப் பாடுபடுபவராகும்.

                        2 . பிரம்மவிதுர்   என்பது , தானாக உலக விசியங்களில் ஈடுபடாமல் , தனக்கென எதையும் விரும்பாமலும் , தாமே கேட்காமல் பிறராக முன்வந்து கொடுத்தால் மட்டும் உட்கொள்பவராகவும் இருப்பவராகும்,

                        3 . பிரம்மவிதுர்யான் என்பது , யாராவது உணவை தன் வாயில் ஊட்டினாலேயன்றி , தானாக கேட்பதோ , உண்பதோ இல்லாமல் அலை நின்ற கடல் போல் சதா சிவ யோக நிலையில்   இருப்பவராகும் .

                       4 . பிரம்மவிதிருஷ்டு என்பது , யாராவது உணவை வாயில் ஊட்டினாலும்  இறங்காத நிலையிலும் , பிள்ளையார் சுழியாகிய அமுத நிலையினின்றும் , குண்டலினி சக்தியினால் சதா அமுதத்தை உட்கொண்ட வண்ணமே இருப்பவருமாகும்..

  
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக