நெருப்பின் அளவும் மருந்தெரிக்கும் விறகும் :-

இதில் விறகு என்பது இரு விரற்கடை அளவில் ஒரு சாண் நீளத்தில் உள்ளதாகும் என கருதுக.
அடுப்பிலேற்றிய மருந்துகளை காய்ச்ச , வறுக்க , நீற்ற சில குறிப்பிட்ட வகை விறகுகளை , அதுவும் ஒரே சாதியாக பயன்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது . அவை புளி - சதுரக்கள்ளி - வெட்பாலை - வேங்கை - உதிரவேங்கை - வெள்வேல் - காசா - ஆவாரை - வல்லாரை - வேம்பு முதலியனவாகும் . மற்றும் துளை - குடித்தைலங்களுக்கு - உசிலை , இலந்தை -- பிடித்தைலத்திற்கு -- புளி , இலுப்பை -- சுரம் முதலியவற்றிற்குரிய உயர்வகை தைலங்களுக்கு - ஆவாரை - சிற்றாமுட்டி ஆகிய விறகு அல்லது அவ்வவற்றின் அடுப்பு கரிகளை பயன்படுத்தவேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக