உடலில் நச்சு தன்மை எவ்வாறு விளைகின்றது . ?
சகல மருந்து பொருட்களையும் கையாளுகையில் , கையாளுமுன் அதனதற்குரிய சுத்தி முறைகளை முறைப்படி செய்யாததாலும் - மருந்துகளை பக்குவப்படி முடிக்காததாலும் - மருந்துகளை மருத்துவர் குறிப்பிட்ட அளவை மீறி உண்பதாலும் - அனுபானம் மற்றும் பத்தியமின்றி உண்பதாலும் உடலில் நச்சு தன்மை ஏற்படுகின்றது . மேலும் கொலைக்கோ , தற்கொலைக்கோ நஞ்சுகளை வழங்குதல் , - கருச்சிதைவுக்கென அகக்கருவியிலும் , புறவுருப்புகளிலும் சில பொருட்களை செலுத்துவதாலும் - பிறரை தன் வழி திருப்ப இடுமருந்தை இடுதல் - நஞ்சை ஒழிக்க நஞ்சுப்பொருள் வேண்டாமிடத்து அப்பொருளை வழங்குதல் - நச்சுயிர்கள் தீண்டுதல் ஆகிய சில காரணங்களினாலும் உடலில் விஷத்தினால் ஆன தீங்குகள் விளையும் ...
பல்வேறு வகையான நச்சுக்களையும் அவற்றை நீக்குவதற்கான சிகிச்சை முறையை பற்றியும் இனி வரும் இடுகைகளில் காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக