ஞாயிறு, 4 மார்ச், 2012

நோயும் - சிகிச்சையும்

நோயும்  - சிகிச்சையும்  :- 

          குழந்தைகளின் கிரந்திக்கு  மருந்து என்ன ?

                                 பிறந்து மூன்று திங்கள் வரை முக்குற்றக்கலப்பால் குழந்தைகளுக்கு கிரந்தி நோய் பற்றுகிறது. இதில் குழந்தை விடாமல் அழுது தொண்டை கட்டி பூனை போல் குரலிடல் , வயிறூதி கையில் தாங்காமல் துள்ளுதல் , சிவப்பு நிறக் கொப்புளங்கள் , வாய் வறண்டு உதடு கறுத்து வருந்தி  அலறுதல்  , முகம் வாடி உடல் முறித்து விம்முதல் , முலையுன்னாமை   முதலிய குறிகள் காணும். 

                                  இதற்கு மருந்து :- விளக்கெண்ணை - தேங்காய் பால் , செம்பருத்தி பூ , இலை சாறு , வகைக்கு படி ஒன்று கூட்டி காய்ச்சி வடித்து , அதில் சுக்கு , திப்பிலி , கிராம்பு , ஏலம் , பூரம் , மிளகு , வகைக்கு ஒரு விராகன் பொடித்து கலந்து அரைசங்களவில் தினம் இரு வேளைக்கொடுக்க சகல வகையான கிரந்திகளும் தீரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக