வியாழன், 26 ஜூலை, 2012

பதினான்கு வேகங்கள் - பாகம் 1

பதினான்கு வேகங்கள்

    " பதினான்கு வேகப்பேர்கள் , பகிர்ந்திட அவற்றைக் கேளாய் "
    " விதித்திடும் வாதந்தும்மல் , மேவுநீர்  மலங் கொட்டாவி "
    " சுதித்திடும் பசி நீர் வேட்கை , காசமோடிளைப்பு நித்திரை "
    " மதித்திடு வாந்தி கண்ணீர் வளர்ச்சுக்கிலஞ் சுவாசமாமே "

                                              - பதினெண் சித்தர் நாடி நூல்....

          நமது உடலில் இயற்கையாய் உண்டாகும் வேகங்கள் - 14 எனவும் அவற்றை அவ்வவற்றின் விரைவில் இருந்து தடுத்து நிறுத்தியோ அடக்கி வைத்தோ விடுவதால் பல நோய்கள விளையும் என கூறப்படுகின்றது . அவற்றின் விவரங்கள் .........

1. வாதம் - ஆபான வாயு - கீல்வாய்வழி - கீழ்க்கால்
              இயற்கையாய் வெளிப்படும் அபான வாயுவை பல காரணங்களால் வெளி விடாமல் முழுதுந் தடைசெய்வதாலும் சிறிது சிறிதாக வெளி விடுவதாலும் - மார்பு நோய் - வாதகுன்மம் - குடல் வாயு - உடல்முழுதும் குத்தல் - குடைச்சல் - வல்லை - வாதம் , மலசல தடை - அதனால் பசித்தீ  மந்தம் முதலியன விளையும் ...

௨. தும்மல் 
               மூக்கில் உள்ள கிருகரனாகிய வாயுவின் தொழிலை அதாவது தும்மலை  தடுத்தால்   அவ்வாயு வேம்மயூற்றை அடைந்து இலேசாகி மேலுக்கு கிளம்பி தலை முற்றும் நோதல் - முகம் இழுத்தல - இடுப்பு வலி முதலியன ஏற்படும் ..

3. சிறு நீர் :- 
               இயற்கையான அல்லது காலமல்லாக் காலத்தில் அபானவாயுவினால் வெளிப்படும் சிறு நீரை அடக்கினால் நீரடைப்பு , நீர்த்தாரை புண்ணாதல் , ஆண்குறி சோர்வுடன் குத்தல் , கீல்கள் தோறும நோதல் , தீப்போல் எறிதல் போன்றவை தோணும் .

4. மலம் :-
              மலத்தை கீல் தள்ளும் அபானவாயுவின்  செயலை எதிர்த்து மலத்தை அடக்கினால் அந்த அபானன் பெருகி - அடக்க பெற்ற மலத்தை கீழே தள்ளும் . அவ்வாயுவின் தன்மையால் சலதொடம் , மூலங்கள் கீல் நோய் , காணும் . அவ்வாயுவே வெம்மயூற்றால் மேல் நோக்கி கிளம்பி தலையில் சேர்ந்து தலை வலித்தல் , ஒலியுடன் வாயு பிரிதல் , உடல் வன்மை குன்றல் , மற்றும் பல நோய்களும் காணும் ..

5 . கொட்டாவி :- 
              கொட்டாவி வரும் பொது அதை அடக்கினால் முகம் வாடல் , இளைப்பு குறி காணுதல் , அளவினபடி உண்டாலும் செரியாமை , நீர்நாய் , வெள்ளை நோய் இவற்றால் அறிவு மயங்கல் , வயிற்றில் பிணி வருதல்  முதலியனவும் , மேலும் தும்மலை அடக்கினால் உண்டாகும் நோய்களும் வரும் .

6 , 7 . பசி மற்றும் தாகம் :-
               காலத்தில் உண்ணாமலும் , குடிக்காமலும் பசி - நீர் வேட்கை அடக்கினால் உடலும் , உடல் உறுப்புகளும் தத்தம் வேலைகளை செய்யாது ,. அதனால் சூளை , பிரமை , உடல் இளைப்பு , உடல் வாட்டம் ,பல நாள் உணவின்றி இருந்தால் மூல சூடு கண்டு , தாதுக்கள் வற்றி அதனால் சயம் எனப்படும் இளைப்பு நோய் ஏற்ப்படும் .

         
               

   




4 கருத்துகள்: