வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மூலிகை சாப நிவர்த்தி - பாகம் 2

மூலிகை சாப நிவர்த்தி வழிபாடு

                         இந்த பகுதியில் மூலிகை சாப நிவர்த்தி வழிபாடுகளை காணலாம் . ஞாயிறு , செவ்வாய், வியாழன்  ஆகிய வார நாட்களில் , குளித்து முடித்து அதி காலையில் குறிப்பிட்ட "உயர்வகை " மூலிகையின் அருகில் சென்று அங்கு நீர் தெளித்து சுத்தம் செய்து , ஒரு வெற்றிலையில் , மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து , அறுகு சூட்டி சிறிது வெல்லம் , வாழைப்பழம், தாம்பூலம் வைத்து சூடம் கொழுத்தி வணங்க வேண்டும் . பிறகு மஞ்சள் , சந்தனம் , குங்குமம் , கலந்த நீரை செடியின் மீது தெளித்து ஊது பத்தி சாம்பிராணி புகை காட்ட வேண்டும் .

                       அடுத்து ஒன்பது அங்குல நீளத்திற்கும் அதிகமான மஞ்சள் நூலில் நடுவில் மூன்று அங்குல நீளமுள்ள மஞ்சளை முடிந்து மூன்று முடி போட்டு , அதற்கு சந்தானம் பூசி, குங்குமம் இட்டு, தூப தீபம் காட்டி கையில் வைத்து கொண்டு மூலிகைக்கருகில்  சூடன்  கொளுத்தி  வைத்து    உரிய      மந்திரத்தை         ( மூன்றாம் பாகத்தில் மந்திரம் பற்றிய விளக்கம் அளிக்கப்படும் ) ஒன்பது முறை கூறி மாங்கல்ய தாரணம் செய்வது போல் வலது புறம அமர்ந்து காப்பு கட்டவும் அதாவது மூன்று , ஐந்து அல்லது ஏழு  முடி போடவும் . ( தாலி கட்டுவது போன்றது )

                          பின்னர்   தேங்காய் உடைத்து , சூடன் கொளுத்தி   அம்மூலிகையின் நேரில் எதிர் முகமாக அமர்ந்து  , உரிய மூல மந்திரத்தை இருபத்தியொரு முறை செபித்து விநாயகரை வணங்கிய பின் அச்செடியின் அடியில் சுற்றிலும் மண்ணை கொத்தி , கண்ணில் படும் முதல் வேரை மட்டும் முனை அறுபடாமல் எடுத்த பிறகு , முழு மூலிகையும் வழக்கம் போல் பிடுங்கவும் . சில குறிப்பிட்ட வகை மூலிகை அதிகம் தேவை படுமாயின் அவ்வகையில் முன்னோடியாக ஒன்றிற்கு மட்டும் சாப நிவர்த்தி செய்து , பிறகு அவ்வினத்தில் தேவைப்படும் அனைத்தையும் எடுத்து கொள்ளலாம் என்பது மரபு ஆகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக