மூலிகை சாப நிவர்த்தி வழிபாடு

அடுத்து ஒன்பது அங்குல நீளத்திற்கும் அதிகமான மஞ்சள் நூலில் நடுவில் மூன்று அங்குல நீளமுள்ள மஞ்சளை முடிந்து மூன்று முடி போட்டு , அதற்கு சந்தானம் பூசி, குங்குமம் இட்டு, தூப தீபம் காட்டி கையில் வைத்து கொண்டு மூலிகைக்கருகில் சூடன் கொளுத்தி வைத்து உரிய மந்திரத்தை ( மூன்றாம் பாகத்தில் மந்திரம் பற்றிய விளக்கம் அளிக்கப்படும் ) ஒன்பது முறை கூறி மாங்கல்ய தாரணம் செய்வது போல் வலது புறம அமர்ந்து காப்பு கட்டவும் அதாவது மூன்று , ஐந்து அல்லது ஏழு முடி போடவும் . ( தாலி கட்டுவது போன்றது )
பின்னர் தேங்காய் உடைத்து , சூடன் கொளுத்தி அம்மூலிகையின் நேரில் எதிர் முகமாக அமர்ந்து , உரிய மூல மந்திரத்தை இருபத்தியொரு முறை செபித்து விநாயகரை வணங்கிய பின் அச்செடியின் அடியில் சுற்றிலும் மண்ணை கொத்தி , கண்ணில் படும் முதல் வேரை மட்டும் முனை அறுபடாமல் எடுத்த பிறகு , முழு மூலிகையும் வழக்கம் போல் பிடுங்கவும் . சில குறிப்பிட்ட வகை மூலிகை அதிகம் தேவை படுமாயின் அவ்வகையில் முன்னோடியாக ஒன்றிற்கு மட்டும் சாப நிவர்த்தி செய்து , பிறகு அவ்வினத்தில் தேவைப்படும் அனைத்தையும் எடுத்து கொள்ளலாம் என்பது மரபு ஆகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக