திங்கள், 23 ஜூலை, 2012

சில சித்தர்களின் பெயர்கள் - 1

சில  சித்தர்களின் பெயர்கள் :- 

                          சித்தர்களை பற்றியும் அவர்களின்  பராக்கிரமங்கள் பற்றியும் நமக்கு நன்கு தெரியும் . பதினெட்டு சித்தர்கள் தவிர மேலும் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள் . அவர்களில் சிலரின் பெயர்களை நாம் தெரிந்து கொள்வோமா ..

அம்பிகானந்தர் , அசமாருதமகரிசி , அழகுதேவன் , அகிலாண்ட சித்தர் , ,அமிர்தசித்தர்  , அவத்தியமாமுனி , அருள்சித்தர் , அடவிசித்தர் , அணிமாதிசித்தர் அழகானந்தர் , அத்திரி ,மகரிசி  ,அலுகன்னிசித்தர், அசுவினிதேவர், அல்லமாப்ரபு, அமுதமகரிசி, ஆராதாரசித்தர்  ஆகாயகெவுனசித்தர் ,இராமரிஷி ,இராமானந்தர்  ,இமயகிரிசித்தர் , உதரகிரிசித்தர் , உலுகமாமுனி , உமையாள்  , ஒளவையார் ,  கணபதி , கணநாதர் , கபிலர் , கடைப்பிள்ளை ,கலைகோட்டுமுனி  , ,கல்லுளிசித்தர்  , கஞ்சமலை சித்தர் , கதண்டுமாமுனி , கன்னி சித்தர் , கன்னானந்தர் கலியுகரிசி , கடுவெளிசித்தர் , , கபாடசித்தர் , கடக்பனாதர் , கச்சியப்பமுனி கர்கமாமுனி ,  கம்பளினாதர் கலிங்க , நாதர் கநையாழி சித்தர் , கங்காலமாமுனி  , கண்ணுவ மகரிஷி ,  கருப்பமுனி , கபாலமுனி ,காகபுஜண்டர்  ,காலமகாரிசி  , காலாட்டி சித்தர் ,  காயசித்தி நாதர் , காலங்கி நாதர் , காங்கேயமுனி  காஞ்சனமுனி, காலிங்க மகாரிஷி , ,காசிவிஸ்வநாதர்  .......

தொடரும் ......

ஞாயிறு, 22 ஜூலை, 2012

சித்தர்கள் லிங்க பூசையின் தத்துவம்

                      சித்தர்கள் லிங்க பூசையின் தத்துவம்:-

                      சித்தர்களின்  கொள்கை படி ஈசனை { உயிரை } வணங்குவது - சிவ பூசை எனவும் , ஈசுவரியை ( வலிமையை ) வணங்குவது - சக்தி பூசை எனவும் , இருவரையும் ஒருங்கே  வணங்குவது சிவசக்தி பூசை எனவும் கூறப்படும் .  உலகின் அனைத்து தோற்றத்திற்கும் , இயக்கத்திற்கும் ஆதாரமாக  உள்ளது  விந்து - நாதமே என்ற தத்துவத்த்டை குறிப்பதற்கு ஆண் பெண் குறிகளின் தோற்றமாக இலிங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது . இலிங்கம் கல்லினால் குழவியை போல் செய்து மேற்பக்கம் உருண்டயாகவும் அடிப்பக்கம் யோநி என்ற பீடத்தில் பொருந்தியதாகவும் இருக்கும். எனவே இலிங்க பூசையிலே சக்தி பூசையும் அடங்கியுள்ளது . ஆண் பெண் இரண்டையும் குறிப்பதால் இதனை ஆவுடையார் எனவும் கூறப்படும் . பஞ்ச பூதங்களையும் குறிக்க கூடிய லிங்கமானது ஆதார - பிராண - சிவ - மூல - பார்த்திவ - பாதாள - ஆவடையார் லிங்கங்கள் என பலவகையாக கொள்ளப்படும் . ஆயினும் ஆகம விதிப்படி ஐவகையாக மட்டுமே கொள்ளப்படும் . அவையாவன :- 

1.  பெண்லிங்கம்  :-  இது இருபாலரின் குறியும் இணைந்துள்ளதால் இது  பொது வழிபாட்டுக்குரியது . இது முதல் நிலையாகிய சரியை க்கும் உடையது .

2. பூலிங்கம் :- இது ஆண் லிங்கமாகும் . இது உண்மை , சக்தியை கண்டறிய உதவும் லிங்கமாகும். இது இரண்டாவது நிலையான கிரியையின் தொடக்கத்திற்கு உரியது

3.  நபும்சக லிங்கம் :- இது இரண்டிலும் சேராதது . இருண்ட நாடு நிலையான , மற்றும் கிரியை வெற்றி பெறும் நிலையில் உள்ள வழிபாடாகும் . 

4.  பரம லிங்கம் :- இதுமிக உயர்ந்த அல்லது மறைப்பு லிங்கமாகும் .  இது மூன்றாம் நிலையான யோக வழிபாட்டிற்குரியது . 

5.  மகா லிங்கம் :- இது அறிவு ஒளியானது . இது பிறப்பை மறுத்து பரம்பொருளை  அடைவதற்கு உரிய நான்காம் நிலையான ஞான வழிபாட்டிற்குரியது .

                                    இவ்வகை லிங்கங்களையும் , பஞ்ச பூதங்களின் அடிப்படையில் பிரித்து பிருத்விலிங்கம் காஞ்சிபுரத்திலும் , அப்பு லிங்கம் - சம்புகேச்வரம் , திருவானைக்காவலிலும்  , தேயு லிங்கம் - திருவண்ணாமலையிலும் , வாயு லிங்கம் - காளத்தியிலும் , ஆகாய லிங்கம் - சிதம்பரத்திலும் நிர்மாணிக்க பட்டுள்ளது .
                                 இவ்வகை வழிபாடு யாவுமே சிவ-சக்தியின் வலிமையை உலகத்திற்கு உணர்த்துவதற்கும் , மேல் நிலையை அடைய வழிகாட்டுவதற்கும் வகுக்கபட்டவையே தவிர வேறில்லை . விநாயகர் வடிவ அமைப்பிலும் , ஓம் என்ற எழுத்தின் வடிவிலும் உள்ள சூக்குமம் இதுவன்றி வேறொன்றுமில்லை .

                    

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

நாடியின் எண்ணிக்கையும் - பார்ப்பதற்கான காலமும்


                    நாடித்துடிப்ப்பின் எண்ணிக்கை வயதுக்கேற்ப மாறுபடும். அதாவது ஒரு நிமிடத்திற்கு பிறந்த குழந்தைக்கு  - 140  ; குழந்தைகட்கு - 100  ; பால பருவத்தில் 120  - 130  ; வாலிபத்தில் - 90 ; முழு பருவ ஆணுக்கு 70  முதல் - 90  வரை ; முழு பருவ பெண்ணுக்கு 75  முதல் - 80  வரை : தளர்ந்த பருவத்தில் 80  ; வயதான பிறகு 75  ஆகிய தடவைகளும் மற்றும் அமர்ந்திருப்பின் 40  ; நின்றால் 75  ; படுக்கையில் 67  தடவையும் வீதம் சாதாரணமாக நாடி துடிக்கும் . இதில் கோதுமையின் அளவுள்ள ஒரு மாத்திரை அளவில் வாத நாடியும் , அரை மாத்திரை அளவில் பித்த நாடியும் , மேற்படி கால் மாத்திரை அளவில் கப நாடியும் நடந்தால் நலமாகும் . இதில் மாறுதல் காணின் பிணி பற்றும் என்பதை அறியலாம் . 

                        நாடித்துடிப்பை சித்திரை - வைகாசி மாதத்தில் - உதயத்திலும் . ஆணி - ஆடி - ஐப்பசி - கார்த்திக்கையில் மதியத்திலும் - பங்குனி - ஆவணி - புரட்டாசியில் இரவிலும் முறையே தெளிவாக அறியலாம் . மேலும் காலை மணி ஆறு முதல் - பத்து வரை வாதமும் , பத்து மணி முதல் - இரண்டு மணி வரை பித்தமும் , மாலை இரண்டு முதல் - ஆறு வரை கபமும் , மிகவும் எழுச்சியுடன் இருக்கும் ஆகவே அந்தந்த வேளையில் அவ்வவற்றை  கண்டறிதல் சுலபமாகும் . இங்ஙனமே மாலை ஆறு முதல் காலை ஆறு வரை உள்ள இரவு நேரத்திற்கும் கிரமப்படி கண்டறிதல் வேண்டும் .


ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

நாடி பார்க்கும் முறை :-

  நாடித்  துடிப்பு எப்படி ஏற்படுகின்றது ?

                              நமது இருதயத்தின் இடது சடரம் குவியும் பொழுது இரத்தம் தள்ளப்பட்டு  கண்டரையின் மூலம் சகல நாளங்களுக்கும் பாய்வதால் நாளங்கள் விரியும் . மீண்டும் இடது சடரம் விரியும் பொழுது  குருதி இழுக்கப்படுவதால் நாளங்கள் சுருங்கும் . இவ்விதம் இருதயம் விரியவும் சுருங்கவும் இருப்பதால் இதனை சேர்ந்த நாடி நரம்புகளும் விரிந்து சுருங்கும் தன்மை உடையதாக இயங்கி , இருதய நடையின் மாறுதல்களை தெரிவிக்கின்றது . இருதயத்தின் நிலையும் உடல் நிலைக்கேற்ப மாறுபாடு அடைவதால் அவற்றை நாம் நாடித்துடிப்பின் மூலம் அறிய முடிகின்றது . 

                            நாடித்துடிப்பினை  தசநாடி இருப்பிடங்களிலும் உணரலாம் எனினும் , கைகளில் அறிவதே நலமாகும் . எனவே ஆண்களுக்கு வலது கரத்திலும் , பெண்களுக்கு இடது கரத்திலுமாக -- முன் கையின்  ஆரை எலும்பின் மேற்புறமுள்ள  பெரு நாடியை   - மணிக்கட்டிற்கு கீழே ஒரு அங்குலம் தள்ளி  முவ்விரலால் மாறி மாறி மெதுவாக அழுத்தியும் தளர்த்தியும் பார்க்க வேண்டும் . அவ்வமயம் நமது ஆள்காட்டி விரலில் உணர்வது வாதம் எனவும் , நடு விரலில் உணர்வது பித்தம் எனவும் , மோதிர  விரலிளுனர்வது சிலேத்துமம் எனவும் அறியவும் . மற்றும் பூத நாடி பெரு விரல் - சிறு விரலிலும் குரு நாடி ஐந்து விரல்களிலும் சேர்ந்தும்  நிற்கும்.   இதில் நாடியின் எண்ணிக்கை, நடை, அழுத்தம், தன்மை,எழுச்சியின் அளவு இவற்றை அறிய வேண்டும் 


 

செவ்வாய், 20 மார்ச், 2012

விசக்கடியில் உயிர் இருப்பதை அறிவது

விசக்கடியில் உயிர் இருப்பதை அறிவது 

                                 அரவம் முதலிய கொடிய நச்சுயிர்கள்   தீண்டியவன் மயங்கி கிடக்கையில் அவன் உடலில் உயிர் உள்ளதா - இல்லையா என்பதை சில குறிகளால் அறியலாம் . அதாவது விழி மேல் அல்லது கீழ் நோக்கியோ , பக்கத்தில் ஒதுங்கி இருப்பினும் - விரலில் சுடக்கு பரியினும்   - கீறிய இடத்தில் சிவப்பு குருதி வடியினும் - நகக்கண்ணில் உதிரமோடினும் - அடித்த இடம் தடித்து சிவந்து வெதும்பினும் - கொடுத்த மருந்து எதிரேடுப்பினும் - தண்ணீரில்     முங்கினாலும் - எருக்கு அல்லது தைவேளை சாற்றை ஒரு காதில் விட அது மற்றொரு காதில் வராதிருப்பினும் - உடலில் உயிர்   அடங்கி உள்ளது என உணர்ந்து , சிகிச்சை செய்ய உயிர் திரும்பும் ....

                                  ஆயின் மேற்படி குறிகளுக்கு மாறான குறிகளுடன் - விழி நிலைத்து - தாது நின்று , உடல் குளிர்ந்து  பல் கறுத்து இருப்பினும் விஷக்கடியுண்டவன் இறந்து விட்டான் என அறிக ..........

திங்கள், 19 மார்ச், 2012

சுவை மூலம் விஷக்கடியை அறிவது எப்படி ?

சுவை மூலம் விஷக்கடியை அறிவது எப்படி ?

                            தீண்டிய நச்சுயிர்கள் காணாவிடின் கடியுண்டவனுக்கு சில பொருட்கள் கொடுத்து அதன் சுவை மாற்றத்தின் மூலம் தீண்டியவற்றை அறியலாம். பாம்புக்கடி பட்டவனுக்கு ஆடுதீண்டாப்பாளை வேரை  உண்ணும்படி கொடுக்க அதன் சுவை மாறி தித்திப்பின்  - நல்லப்பாம்பு , முதலில் இனித்து பின் துவர்த்தால் --மூக்கன்,  மிகவும் புளித்தால்--வழலைசாதி--வளவளுத்து புளித்தால் --கருவழலை -- மயக்கத்துடன் காரமாயிருப்பின் - மயக்கரவு - - நினைத்த சுவை தோன்றின் - புடையன் -- முட்கீரை சுவையிருப்பின் - மண்டலி , - புளித்து பின் காரமாயிருப்பின் - பெரு விரியன் , தலை நடுக்கினால் - விரியன் சாதி -- நா கடுகடுத்தால் - கொம்பேறி மூக்கன் -- , நாவு சுருட்டினால் - சுருட்டை - உள்நாவு சர சரத்தால் சாரை - கண்மறைத்து நெஞ்சடைப்பின் - கல்நெஞ்சன் -- தூக்கமின்றி நெஞ்சு படபடப்பின் - சவடி --சுரனயற்று இருப்பின் - இரு தலை மணியன் -- பல் கடுத்தால் - செய்யான் -- சல சலவென மூக்கு எறிந்தால் - எலிச்சாதி  மேல் நாவு நொந்தால்  - நச்செலி - வாந்தியானால் --அரணை- - கண் காது அடைத்தால் - சில்விடம் -- முதலியன முறையே தீண்டியுள்ளன எனவும் :: கசந்தால் - ஒருவித நஞ்சுமில்லை  எனவும் உணரலாம் . 

                            ஆடுதீண்டாபாளை - ஆகாசக்கருடன் -- நாகதாளிக்கிழங்கு ஆகியவை இருக்கும் ( வைத்திருக்கும் ) இடங்களில் நச்சுயிரிகள் அண்டாது ..........

ஞாயிறு, 18 மார்ச், 2012

விஷக்கடி வைத்தியரின் திறமை என்ன ?

விஷக்கடி வைத்தியரின் திறமை என்ன ? 

                             நச்சுயிர் கடியினாலும் , விஷ மருந்துகளை உட்கொள்வதாலும் உடலில் ஏற்படும் நச்சு தன்மையை , விஷ முறிவு மருந்துகளாலும் , மாந்திரீகத்தாலும் நீக்கி குணப்படுத்தும் முறைக்கு - விஷ வித்தை அல்லது சாங்கலி எனவும் -- இதில் தேர்ச்சி பெற்றவரை - விஷ வைத்தியர் அல்லது சாங்கலிகன் எனவும் கூறப்படும். பொதுவாக ஒரு விஷ வைத்தியருக்கு பலவித நஞ்சுகளின் குறி குணங்களும் - அவை இன்னதென கண்டறியும் திறனும் - அதனதற்குரிய சிகிச்சை மற்றும் மருந்து முறைகளும் தெரிந்து இருக்க வேண்டும் . சித்த முறையின் படி மருத்துவமும் மாந்திரீகமும் அறிந்திருப்பார் . மேலும் சிலருக்கு தனக்குரிய ஞான திருஷ்டியின் மூலம் நோயுற்றவனின் பெயர் - முகவரி நச்சுயிர் தீண்டிய நேரம் முதலிய தகவல்களை வைத்து அவனை இன்னது தான் தீண்டியுள்ளது என்று கண்டறிந்து  , தனது இருப்பிடத்தில் இருந்தே , வெகு தொலைவில் உள்ள நோயாளியை  நேரில் பார்க்காமலேயே குணப்படுத்திவிடும் சக்த்தியும் சிலருக்கு உண்டு. சிலருக்கு தனக்குரிய மனோசக்தியாலும் , காந்த சக்தியாலும் செயல்பட்டு நச்சு தன்மையை நீக்கி குணப்படுத்த முடியும் . பலரால் அறியப்படாத இம்முறைக்கு மூமியா என்று பெயர் . அருள்வாக்கு பெற்ற சிலரது பெயரை கூறி ஆணையிட்டாலே விஷம் மேலேறாது . பிறகு சிகிச்சைசெய்வதும் உண்டு . பொதுவாக மாந்திரீக முறையின் படி இரகசியமான மந்திர உச்சரிப்புகளினாலும்--உள் வெளி மருந்துகளினாலும் - ஆக இரு வழியிலும் நஞ்சுண்டோரை காக்கும் முறைகள் நமது மருத்துவத்தில் உள்ளன ...