ஞாயிறு, 31 ஜனவரி, 2016



அன்பு நண்பர்களுக்கு  வணக்கம் ,

                    சில காரணங்களால் என்னால் தொடர்ந்து மூன்று வருடங்களாக  புதிய இடுகைகளை இட முடிய வில்லை . அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். இனி தொடர்ந்து இயங்கி உங்களை வாரம் ஓரிரு முறையாவது  கண்டிப்பாக சந்திப்பேன் என்று உறுதி கூறுகின்றேன் . தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் .

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

மூலிகை சாப நிவர்த்தி - பாகம் 3

மூலிகை சாப நிவர்த்தி

                  இந்த பகுதியில் சாப நிவர்த்தி மந்திரங்களை காணலாம்.

            அரிஅர  பரமேஸ்வரர் சாபம்  நசிமசி - பார்வதி சாபம்  நசிமசி -  அரிஅர சாபம்  நசிமசி - நந்தி சாபம்  நசிமசி - அகஸ்தியர் சாபம்  நசிமசி - பதிநெண்சித்தர் சாபம்  நசிமசி -  நசிமசி  மசிமசி  நசியமாக கடவ சுவாஹா " 

                        மேற்கூறிய மந்திரத்தை 15  முறை கூறி சாப நிவர்த்தி செய்ய வேண்டும் .   

                 மூலிகை சாப நிவர்த்தி இலகு முறை 

          நாடெல்லாம் சுற்றி நானுன்னை காணாமல் 
          காடெல்லாம் சுற்றி நானுன்னை கண்டேன் 
          நீயொரு சக்தி , நானொரு சிவன் ,
          நீ என் வசமாக சுவாஹா .......

                        என்று  21  முறை செபித்து மூலிகைகளின் சாபத்தை  நீக்கி  பின் உயிர் ஊட்டி எடுக்க முழுப்பலன் கிட்டும் ..

             மூலிகைகளுக்கு உயிர் கொடுத்தல் ....

           " ஓம்  மூலி , சர்வ மூலி , உயிர்மூலி
           உன் உயிர் உன் உடலில் நிற்க கடவ சுவாஹா "

என்று 15  முறை கூறி உயிர் கொடுத்து பிடுங்கவும் . இதற்கு முன் சாப நிவர்த்தி செய்ய மறக்க வேண்டாம் .  இதன் மூலம் மூலிகையின் சக்தி அதிகரிக்கும் . பொதுவாக மூலிகைகளை மார்கழி , தை , மாசி ஆகிய இலையுதிர் காலங்களில் சேகரிப்பது நல்லது .

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மூலிகை சாப நிவர்த்தி - பாகம் 2

மூலிகை சாப நிவர்த்தி வழிபாடு

                         இந்த பகுதியில் மூலிகை சாப நிவர்த்தி வழிபாடுகளை காணலாம் . ஞாயிறு , செவ்வாய், வியாழன்  ஆகிய வார நாட்களில் , குளித்து முடித்து அதி காலையில் குறிப்பிட்ட "உயர்வகை " மூலிகையின் அருகில் சென்று அங்கு நீர் தெளித்து சுத்தம் செய்து , ஒரு வெற்றிலையில் , மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து , அறுகு சூட்டி சிறிது வெல்லம் , வாழைப்பழம், தாம்பூலம் வைத்து சூடம் கொழுத்தி வணங்க வேண்டும் . பிறகு மஞ்சள் , சந்தனம் , குங்குமம் , கலந்த நீரை செடியின் மீது தெளித்து ஊது பத்தி சாம்பிராணி புகை காட்ட வேண்டும் .

                       அடுத்து ஒன்பது அங்குல நீளத்திற்கும் அதிகமான மஞ்சள் நூலில் நடுவில் மூன்று அங்குல நீளமுள்ள மஞ்சளை முடிந்து மூன்று முடி போட்டு , அதற்கு சந்தானம் பூசி, குங்குமம் இட்டு, தூப தீபம் காட்டி கையில் வைத்து கொண்டு மூலிகைக்கருகில்  சூடன்  கொளுத்தி  வைத்து    உரிய      மந்திரத்தை         ( மூன்றாம் பாகத்தில் மந்திரம் பற்றிய விளக்கம் அளிக்கப்படும் ) ஒன்பது முறை கூறி மாங்கல்ய தாரணம் செய்வது போல் வலது புறம அமர்ந்து காப்பு கட்டவும் அதாவது மூன்று , ஐந்து அல்லது ஏழு  முடி போடவும் . ( தாலி கட்டுவது போன்றது )

                          பின்னர்   தேங்காய் உடைத்து , சூடன் கொளுத்தி   அம்மூலிகையின் நேரில் எதிர் முகமாக அமர்ந்து  , உரிய மூல மந்திரத்தை இருபத்தியொரு முறை செபித்து விநாயகரை வணங்கிய பின் அச்செடியின் அடியில் சுற்றிலும் மண்ணை கொத்தி , கண்ணில் படும் முதல் வேரை மட்டும் முனை அறுபடாமல் எடுத்த பிறகு , முழு மூலிகையும் வழக்கம் போல் பிடுங்கவும் . சில குறிப்பிட்ட வகை மூலிகை அதிகம் தேவை படுமாயின் அவ்வகையில் முன்னோடியாக ஒன்றிற்கு மட்டும் சாப நிவர்த்தி செய்து , பிறகு அவ்வினத்தில் தேவைப்படும் அனைத்தையும் எடுத்து கொள்ளலாம் என்பது மரபு ஆகும் .

புதன், 1 ஆகஸ்ட், 2012

மூலிகை சாப நிவர்த்தி - பாகம் 1

மூலிகை சாப நிவர்த்தி  

                         பொதுவாக நாம் கேள்வி பட்டிருப்போம் .. மூலிகை சாப நிவர்த்தி செய்து தான் எடுக்க வேண்டும்  என்று. அது என்ன - சாப நிவர்த்தி என்பது எப்படி ? அதற்கு என்ன மந்திரம் சொல்வது ? என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கும். யாரும் சொல்ல மாட்டார்கள் ...இதோ அதை பற்றிய விளக்கங்கள் .. மூன்று பாகங்களாக...

                         பொதுவாக நமது கண்களுக்கு சாதாரணமாகவும் , அமைதியான சடப்பொருளாகவும் காட்சியளிக்கும்  தாவர வகைகள் யாவுமே , உண்மையில் அதனதன் இயற்கை தன்மைக்கேற்ப , எளிய மருத்துவ குணத்தில் இருந்து அரிய சக்தி வரை தன்னகத்தே கொண்டவை ஆகும். இவற்றின் துணையின்றி , சித்தர்கள் செப்பியுள்ள மணி , மந்திரம் , மருந்து உள்ளிட்ட எந்த ஒரு கலையினையுமே அடையவியலாது. நாம் உயிர்வாழ  உணவாக பயன்படக் கூடியவற்றுள் மிகுதியானது தாவர இனப்பொருட்களே ஆகும் .   வைத்திய , வாத , யோகா , ஞான , கல்பம் உள்ளிட்ட அனைத்து சித்திகளையும் பெற உறுதுணை புரிவது மூலிகைகளேயாகும். இவற்றிக்கு உயிர் மட்டுமல்ல. உணர்வுகளுமுண்டு . இன்றைய விஞ்ஞானமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது . 

                      நிற்க. மூலிகைகள் யாவுமே மனித குல பயனுக்காகவே படைக்க பெற்றிருபினும் கூட - அவற்றிற்கு உயிரும் உணர்வும் உண்டு என்ற அடிப்படையில் நோக்குகையில் அவற்றை நாம் கைக்கொள்ளும் முன் அவற்றின் சாபத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும் . மூலிகைகளை நம் வசம் ஆக்கும் முன் அவற்றிற்கு "" இவனால் நமது ஆயுள் முடிகின்றதே  "" என்ற ஏக்கமும் பயமும் சினமும் ஏற்படாமலும் , நம்மை நாடி யாசிக்கும் இவனுக்கு நமக்குரிய சக்த்திகள் எல்லாம் அளித்து உதவ வேண்டியது நமது கடமை ஆகும் " என்ற நல்லெண்ணமும் ஏற்பட வேண்டியது  மிக அவசியமாகும் .  இதோடு சித்தர்களால் - உரிய பயன் அளிக்காதவாறு மூலிகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சாபமும் விலக்கபடவேண்டும் . இவை அனைத்திற்கும் பொருந்தும் எனினும் - சில முக்கியமான சாதனைக்குரிய - உயர்வகை மூலிகைகளுக்காவது இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டுவது அத்தியாவசியமாகிறது . அதற்குரிய சில வழிமுறைகளையும் , சில மந்திரங்களையும் சித்தர் பெருமக்கள்  நமக்கு அருளி உள்ளார்கள். அவற்றை கடைபிடித்தலேயன்றி முழுப்பயனையும் நாம் அடையவியலாது என்பது திண்ணம் . அடுத்து வரும் பாகத்தில் சாப நிவர்த்தி வழிபாடுகளை காணலாம்

 




வெள்ளி, 27 ஜூலை, 2012

பதினான்கு வேகங்கள் - பாகம் 2

பதினான்கு வேகங்கள் :- 

     8. காசம் ( இருமல் )  9. இளைப்பு ( ஆயாசம் ) :- 

                காசம் என்ற ஈளை இருமலை அடக்கினால் ( இதற்கு இளைப்பு என்றும் பொருள் உண்டு ) - கடும் இருமல் காணும் . மூச்சு காற்றில் கெட்ட மனம் வீசும் . மேலும் இருதய நோயும் காணும் . இளைப்பை  அடக்கினால் மிக்க வெப்பம் உண்டாக்கி அதனால் நீர்மேகம் , குன்மம் , மூர்ச்சை , குளிர் முதலியன காணும் . தும்மலை அடக்குவதால் உண்டாகும் நோய்களும் கூட காணும்  .

    10 . தூக்கம் ( நித்திரை ) :- 

                 இயற்கையாய் தச வாயுவில் ஒன்றாகிய தூக்கத்தை அடக்கினால் நாள்தோறும் தலைக்கனம் , கண் சிவந்து பீழை கட்டி எரிதல் , செவிட்டு தன்மை , தெளிவற்ற சொல் , சோம்பல் முதலிய பிணிகள் வந்து சேரும் . 

    11. வாந்தி  ( சத்தி - வமனம் )

                இயற்கை மாறுபாட்டினால் ஆன  வாந்தியை தான் முயற்சியினால் அடக்கினால் - புழுக்கடியினால் காணும் தடிப்பு , குட்டம் ,  நமைச்சல் , பாண்டு , கண்நோய் , பித்த விட பாகம் , இரைப்பு சுரம் , இருமல் ஆகியன ஏற்படும் ..

     12 . விழிநீர் ( கண்ணீர் )

                 கண்ணில் இருந்து வரும் நீரை அடக்கினால் தமர வாயு , பீநசம் , கண்நோய் , தலையில் புண் மற்றும் அப்புண்ணில்  வாயு கூடினால் குன்மநோய் முதலியன காணும் . 

      13. சுக்கிலம் ( விந்து ) 

                 அபான வாயுவினால் வெளிப்படும் விந்துவை அடக்கினால் சுரம் , நீர்க்கட்டு , கை கால்கள் , கீல்கள் , இவற்றில் நோய் , விந்து கசிந்து ஆடை நனைதல் , மார்படைப்பு , வெள்ளை ஆகியன உண்டாகும் . 

      14. சுவாசம் ( மூச்சு )

              பிராண வாயுவின் செயல் ஆன சுவாசத்தை அடக்கினால் இருமல் , வயிற்று பொருமல் , சுவை அறியாமை , குலை நோய் , சுரம் , வெட்டை , முதலியவை  விளையும். 

                        

                 

வியாழன், 26 ஜூலை, 2012

பதினான்கு வேகங்கள் - பாகம் 1

பதினான்கு வேகங்கள்

    " பதினான்கு வேகப்பேர்கள் , பகிர்ந்திட அவற்றைக் கேளாய் "
    " விதித்திடும் வாதந்தும்மல் , மேவுநீர்  மலங் கொட்டாவி "
    " சுதித்திடும் பசி நீர் வேட்கை , காசமோடிளைப்பு நித்திரை "
    " மதித்திடு வாந்தி கண்ணீர் வளர்ச்சுக்கிலஞ் சுவாசமாமே "

                                              - பதினெண் சித்தர் நாடி நூல்....

          நமது உடலில் இயற்கையாய் உண்டாகும் வேகங்கள் - 14 எனவும் அவற்றை அவ்வவற்றின் விரைவில் இருந்து தடுத்து நிறுத்தியோ அடக்கி வைத்தோ விடுவதால் பல நோய்கள விளையும் என கூறப்படுகின்றது . அவற்றின் விவரங்கள் .........

1. வாதம் - ஆபான வாயு - கீல்வாய்வழி - கீழ்க்கால்
              இயற்கையாய் வெளிப்படும் அபான வாயுவை பல காரணங்களால் வெளி விடாமல் முழுதுந் தடைசெய்வதாலும் சிறிது சிறிதாக வெளி விடுவதாலும் - மார்பு நோய் - வாதகுன்மம் - குடல் வாயு - உடல்முழுதும் குத்தல் - குடைச்சல் - வல்லை - வாதம் , மலசல தடை - அதனால் பசித்தீ  மந்தம் முதலியன விளையும் ...

௨. தும்மல் 
               மூக்கில் உள்ள கிருகரனாகிய வாயுவின் தொழிலை அதாவது தும்மலை  தடுத்தால்   அவ்வாயு வேம்மயூற்றை அடைந்து இலேசாகி மேலுக்கு கிளம்பி தலை முற்றும் நோதல் - முகம் இழுத்தல - இடுப்பு வலி முதலியன ஏற்படும் ..

3. சிறு நீர் :- 
               இயற்கையான அல்லது காலமல்லாக் காலத்தில் அபானவாயுவினால் வெளிப்படும் சிறு நீரை அடக்கினால் நீரடைப்பு , நீர்த்தாரை புண்ணாதல் , ஆண்குறி சோர்வுடன் குத்தல் , கீல்கள் தோறும நோதல் , தீப்போல் எறிதல் போன்றவை தோணும் .

4. மலம் :-
              மலத்தை கீல் தள்ளும் அபானவாயுவின்  செயலை எதிர்த்து மலத்தை அடக்கினால் அந்த அபானன் பெருகி - அடக்க பெற்ற மலத்தை கீழே தள்ளும் . அவ்வாயுவின் தன்மையால் சலதொடம் , மூலங்கள் கீல் நோய் , காணும் . அவ்வாயுவே வெம்மயூற்றால் மேல் நோக்கி கிளம்பி தலையில் சேர்ந்து தலை வலித்தல் , ஒலியுடன் வாயு பிரிதல் , உடல் வன்மை குன்றல் , மற்றும் பல நோய்களும் காணும் ..

5 . கொட்டாவி :- 
              கொட்டாவி வரும் பொது அதை அடக்கினால் முகம் வாடல் , இளைப்பு குறி காணுதல் , அளவினபடி உண்டாலும் செரியாமை , நீர்நாய் , வெள்ளை நோய் இவற்றால் அறிவு மயங்கல் , வயிற்றில் பிணி வருதல்  முதலியனவும் , மேலும் தும்மலை அடக்கினால் உண்டாகும் நோய்களும் வரும் .

6 , 7 . பசி மற்றும் தாகம் :-
               காலத்தில் உண்ணாமலும் , குடிக்காமலும் பசி - நீர் வேட்கை அடக்கினால் உடலும் , உடல் உறுப்புகளும் தத்தம் வேலைகளை செய்யாது ,. அதனால் சூளை , பிரமை , உடல் இளைப்பு , உடல் வாட்டம் ,பல நாள் உணவின்றி இருந்தால் மூல சூடு கண்டு , தாதுக்கள் வற்றி அதனால் சயம் எனப்படும் இளைப்பு நோய் ஏற்ப்படும் .

         
               

   




செவ்வாய், 24 ஜூலை, 2012

சில சித்தர்களின் பெயர்கள் - 2

 சில  சித்தர்களின் பெயர்கள் - 2

                     இந்த பகுதியில் மேலும் சில சித்தர்களின் பெயர்களை பார்ப்போம் .

                     குருபர முனி , குருராஜர் , குண்டலி சித்தர் , குபேரசுந்தரர் , கூர்மானந்தர் , கூனக்கண்ணர் , கெம்புரிசி , கெவுன குளிகை சித்தர் , கையாட்டி சித்தர் , கௌசிகர் , சனகர் , சதுரகிரிசித்தர் , சங்க முனி , சங்கரர் , சங்கிலி சித்தர் , சம்புமாமுனி , சச்சிதானந்தர் , சதாசிவ முனி , சவர்க்காரமுனி , சமையநாதர் , சந்திர நாதர் , சங்கமுனி , சத்தரிசி , சமாதி சித்தர் , சவுனக முனி , சாந்த மகரிஷி , சாங்கிய மகரிஷி , சிவன் , சிவநேச சித்தர் , சிக்கிந்தாரிஷி , சிவத்தீஸ்வரர்  சிபி சித்தர் , சிவப்ரகாச ரிஷி , சிவனேந்திர முனி , சிவபிரம்ம ரிஷி , சித்தானந்தர் , சுந்தரர் , சுகபிரம்மரிஷி , சுகாதார சித்தர் , சுழிமுனைசித்தர் , சுவர்க்க மகா ரிஷி , சிவத்தியா முனி , சூதன மாமுனி , சூரியானந்தர் ........

தொடரும் .............